நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் ரோடு குண்டும் குழியுமாக இருந்ததை சரி செய்யாததை கண்டித்து இன்றும், நாளையும் 2 நாள் கடையடைப்பு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஆர்.டி.ஓ., விஸ்வநாதன் தலைமையில், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் உடனடியாக பராமரிப்பு பணிகளும், ஜூன் மாத கடைசி வாரத்தில் புதிய சாலைக்கான வரைவு திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஒப்பு கொண்டுள்ளனர்.
இதையடுத்து கடையடைப்பு வாபஸ் பெறுவதாக நேற்று மாலை வர்த்தக சங்க செயலாளர் வெங்கடேஸ்வர ராஜா தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.