sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குடிநீர் கேட்டு பெண்கள் ஸ்ரீவி., ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை போராட்டம்

/

குடிநீர் கேட்டு பெண்கள் ஸ்ரீவி., ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை போராட்டம்

குடிநீர் கேட்டு பெண்கள் ஸ்ரீவி., ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை போராட்டம்

குடிநீர் கேட்டு பெண்கள் ஸ்ரீவி., ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை போராட்டம்


ADDED : செப் 03, 2024 05:08 AM

Google News

ADDED : செப் 03, 2024 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பூவாணி ஊராட்சிக்கு உட்பட்ட கொளுஞ்சிபட்டியில் மூன்று மாதமாக குடிநீர் சப்ளை செய்யப்படாததால் பெண்கள் ஒன்றிய அலுவலகத்தில் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கொளுஞ்சி பட்டியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால், மூன்று மாதங்களாக குடிநீர் சப்ளை கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தினமும் ஒரு குடம் குடிநீர் ரூ.10 கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.

நேற்று காலை 11:00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் கிராம மக்களை, அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்று அங்கிருந்த பொறுப்பு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். உடனடியாக பிரச்சனையை சரி செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us