ADDED : செப் 04, 2024 01:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முடுக்கு தெருவை சேர்ந்தவர் மனோஜ் குமார் 23, சென்னையில் வேலை பார்க்கிறார்.
கோயில் திருவிழாவிற்காக வத்திராயிருப்பு வந்த இவர் நேற்று அதிகாலை 1:30 மணிக்கு தங்கள் தெருவில் உள்ள வீர காளியம்மன் கோயிலில் திருவிழாவிற்கு வேப்பிலை தோரணம் கட்டும்போது, மின்சார வயர் மீது தவறுதலாக கை பட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
வத்திராயிருப்பு போலீசார் விசாரித்தனர்.