/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெண் தற்கொலை வழக்கில் கணவர் மாமியாருக்கு 10 ஆண்டு சிறை
/
பெண் தற்கொலை வழக்கில் கணவர் மாமியாருக்கு 10 ஆண்டு சிறை
பெண் தற்கொலை வழக்கில் கணவர் மாமியாருக்கு 10 ஆண்டு சிறை
பெண் தற்கொலை வழக்கில் கணவர் மாமியாருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : பிப் 22, 2024 06:01 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் அருகே குடும்பத்தகராறில் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
சாத்தூர் தாலுகா ஏழாயிரம்பண்ணையை சேர்ந்தவர் செல்வகுமார் 31. கூலி தொழிலாளி. இவரது மனைவி சீதாலட்சுமி 21. இத்தம்பதியினர் விருதுநகர் ஏ.வி.டி.நகரில் வசித்து வந்தனர். 2014ல் குடும்பத்தகராறில் சீதா லட்சுமி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் போலீசார் செல்வகுமார், மாமியார் ராஜேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.
இதில் செல்வகுமார், ராஜேஸ்வரிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.