sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அருப்புக்கோட்டை நகராட்சியில் 100 சதவிகித வரி வசூல்

/

அருப்புக்கோட்டை நகராட்சியில் 100 சதவிகித வரி வசூல்

அருப்புக்கோட்டை நகராட்சியில் 100 சதவிகித வரி வசூல்

அருப்புக்கோட்டை நகராட்சியில் 100 சதவிகித வரி வசூல்


ADDED : ஏப் 02, 2025 05:36 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகராட்சி 100 சதவீத வரிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் 138 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் வீடுகள் நகராட்சி கடைகள், தொழில் வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு வரிகள் வசூலிக்க அருப்புக்கோட்டை நகராட்சியில் கமிஷனர் தலைமையில் பல்வேறு குழுக்கள் வரிகள் வசூலிப்பில் முனைப்பு காட்டின. அருப்புக்கோட்டை நகராட்சியில் 2024- - 25 ம் ஆண்டிற்கு 111.5 சதவிகித வசூல் செய்து மாநில அரசின் நிதியான சி.எம்.சி., நிதியை பெறுவதற்கு 2 ஆண்டுகளாக தகுதி பெற்றுள்ளது.

மற்ற வரியில்லா இனங்களான தொழில் வரி, காலி இட வரி, குடிநீர் கட்டணம், குத்தகை இனம் ஆகியவற்றில் பல ஆண்டுகளுக்கு பின்னர் 100 சதவிகித வசூல் செய்து சாதனை படைத்துள்ளனர். நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி, நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கம் தலைமையில் 100 சதவிகித வசூல் செய்த நகராட்சி அலுவலர்கள் அனைவரையும் பாராட்டினார்.






      Dinamalar
      Follow us