/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
2023ல் 129 வாகன திருட்டு வழக்குகள்
/
2023ல் 129 வாகன திருட்டு வழக்குகள்
ADDED : மார் 08, 2024 12:25 PM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் முழுவதும் கடந்தாண்டில் 129 வாகனங்கள் திருடு போனதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்துார், காரியாபட்டி, ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் உள்ளிட்ட நகர் பகுதிகள், அதனை சுற்றியுள்ள புறநகர், ஊரகப்பகுதிகளில் டூவீலர், கார்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்குள் நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த திருட்டு வாகனங்களை மற்ற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று உதிரிபாகங்களாக பிரித்து விற்பனை செய்கின்றனர். புறநகர், ஊரகப்பகுதிகளில் வாகன சோதனை அதிக அளவில் இல்லாததால் திருட்டு வாகனங்களை இந்த இடங்களில் திருடர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் வாகனங்களை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் வாகன சோதனையின் போது மட்டுமே திருட்டு வாகனங்களை கண்டறியவும் முடிகிறது.
திருட்டு வாகனங்களை வைத்து குற்றச்சம்பவங்களை நிகழ்த்துவதால் குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் போலீசார் திணறுகின்றனர். வாகன திருட்டுகள் அதிகமாக நடக்கும் பகுதிகளில் போலீசார் இரவு ரோந்தை அதிகப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். வீட்டில் டூவீலர், கார் நிறுத்த இடமில்லாதவர்கள் ரோட்டில் வாகனங்களை நிறுத்தும் போது சி.சி.டி.வி., கேமாரக்களை பொருத்த வேண்டும்.
எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா கூறியதாவது:
விருதுநகர் மாவட்டத்தில் 2023 ஆண்டில் 129 வாகன திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 85 வழக்குகளில் வாகனங்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். இதில் மீதமுள்ள 44 வழக்குகளில் வாகனங்களை விரைவாக கண்டறிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

