sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு

/

மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு

மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு

மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு


ADDED : பிப் 06, 2025 02:42 AM

Google News

ADDED : பிப் 06, 2025 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்:விருதுநகர்மாவட்டம் ராஜபாளையத்தில் தனியாக இருந்த மூதாட்டியிடம் பிசியோதெரபிஸ்ட் எனக்கூறி 13 பவுன் நகைகளை நுாதன முறையில் திருடி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராஜபாளையம் கூரைப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி மனைவி காசி அம்மாள் 85. கணவர் இறந்த நிலையில் தனியாக வசிக்கிறார்.

இவரது மகன்கள், மகள்கள் வேறு இடங்களில் வசிக்கின்றனர். நேற்று மதியம் 30 வயதுள்ள வாலிபர் காசி அம்மாள் வீட்டிற்குள் வந்து கழுத்து வலிக்கு பிசியோ செய்வதற்காக மகன் அனுப்பியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய காசி அம்மாளிளிடம் 'கழுத்து, கையில் எண்ணையை தேய்க்க வேண்டும் .அதனால் நகைகளை கழட்டி வைத்து விடலாம்' என கூறியுள்ளார்.

எனவே நகையை கழட்டி கொடுத்தார். சிறிது நேரம் பிசியோ செய்து விட்டு மூன்று தங்க செயின், 4 வளையல், 2 மோதிரம், கம்மல்கள் என 13 பவுன் நகைகளுடன் அந்த வாலிபர் மாயமானார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து மகன் ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டி.எஸ்.பி., ப்ரீத்தி, வடக்கு இன்ஸ்பெக்டர் அசோக் பாபு விசாரணை செய்தனர்.






      Dinamalar
      Follow us