/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
130 போலீசாருக்கு பணி நியமன ஆணை வழங்கல்
/
130 போலீசாருக்கு பணி நியமன ஆணை வழங்கல்
ADDED : நவ 28, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் இருந்து இரண்டாம் நிலை போலீஸ், தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை போலீசாக 130 பேர் தேர்வாகினர். இதில் 42 பேருக்கு நேற்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த விழாவில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
விருதுநகரில் எஸ்.பி., கண்ணன் மீதமுள்ள 88 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார். இதில் ஏ.டி.எஸ்.பி., சூரியமூர்த்தி, விருதுநகர் டி.எஸ்.பி., பவித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.