sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அரசு பஸ் கவிழ்ந்து 14 பேர் காயம்

/

அரசு பஸ் கவிழ்ந்து 14 பேர் காயம்

அரசு பஸ் கவிழ்ந்து 14 பேர் காயம்

அரசு பஸ் கவிழ்ந்து 14 பேர் காயம்


ADDED : ஜன 25, 2025 06:59 AM

Google News

ADDED : ஜன 25, 2025 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் அருகே அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் 9 பள்ளி மாணவர்கள் உட்பட 14 பேர் காயமடைந்தனர்.

விருதுநகரில் இருந்து சிவகாசி கவுண்டம்பட்டிக்கு மாலை 6:00 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது. இதில் 80க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். பாவாலி ரோட்டில் சந்திரகிரிபுரம் அருகே வந்த போது வளைவில் தடுமாறி ஓடையில் ஏறிய போது பஸ் கவிழ்ந்தது.

இதில் விருதுநகர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பாண்டிச்செல்வி 35, கிருஷ்ணவேணி 16, ரஞ்சித் 16, முத்தரசி 14, மீனாட்சி 49, ராமதர்ஷன் 14, மாதவன் 13, தீபக்குமார் 16, ஹரிபாலாஜி 12, சத்தியா 24, மீனா 30, லோகேஷ் 12, பத்மஸ்ரீ 13 என 9 மாணவர்கள் உட்பட 14 பேர் காயமடைந்தனர். சிறு சிறு காயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சை பெற்றனர்.

பஸ் டிரைவரான விருதுநகர் கே.உசிலம்பட்டியை சேர்ந்த ஸ்ரீதரன் 30, கண்டக்டர் சவுந்திரபாண்டியன் 35 ஆகிய இருவரும் தப்பினர்.

எம்.பி., மாணிக்கம் தாகூர், எம்.எல்.ஏ., சீனிவாசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். ஆமத்துார் போலீசார் டிரைவர், கண்டக்டரிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us