/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கல்லுாரி மாணவன் கொலை 17 வயது சிறுவன் சிக்கினார்
/
கல்லுாரி மாணவன் கொலை 17 வயது சிறுவன் சிக்கினார்
ADDED : ஜன 13, 2025 01:13 AM

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் வீரமாணிக்கம், 18. இவர், சாத்துார் அரசு கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, இவரை மர்ம நபர் கத்தியால் குத்தி தப்பினார்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரமாணிக்கம் உயிரிழந்தார். அவரை கொலை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த கட்டட வேலை செய்யும், 17 வயது சிறுவனை, திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'வீரமாணிக்கம் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு, அந்த சிறுமியின் அண்ணன் உறவு முறையிலான, 17 வயது சிறுவன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர், கத்தியால் குத்தியதில் வீரமாணிக்கம் இறந்தார்' என்றனர்.