sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிறுமியை கடத்தி தொல்லை டிரைவருக்கு 20 ஆண்டு சிறை

/

சிறுமியை கடத்தி தொல்லை டிரைவருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமியை கடத்தி தொல்லை டிரைவருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமியை கடத்தி தொல்லை டிரைவருக்கு 20 ஆண்டு சிறை


ADDED : செப் 20, 2024 11:55 PM

Google News

ADDED : செப் 20, 2024 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா மல்லாங்கிணரில் சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த கார் டிரைவர் ஆனந்தகிருஷ்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மல்லாங்கிணரைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் 29, கார் டிரைவராக உள்ளார். இவர் 2021 அக்.,12ல் 17 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி திருச்செந்தூருக்கு கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மல்லாங்கிணறு போலீசார் அவரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.

இதில் ஆனந்தகிருஷ்ணனுக்கு சிறுமியை கடத்தி சென்றதற்கு 10 ஆண்டுகள் சிறையும், பாலியல் தொல்லை கொடுத்ததற்கு 20 ஆண்டுகள் சிறையும், குழந்தை திருமண குற்றத்திற்கு 2 ஆண்டுகள் சிறையும், ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தும், சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டு நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us