sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

2015 க்குள் 596 மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

/

2015 க்குள் 596 மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

2015 க்குள் 596 மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

2015 க்குள் 596 மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்


ADDED : ஜூலை 14, 2011 09:25 PM

Google News

ADDED : ஜூலை 14, 2011 09:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : ''இந்தியாவில் 2015 ம் ஆண்டுக்குள் 596 மாவட்டங்களில் உள்ள நகரங்களில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டமான சைல்டு லைன் திட்டம் செயல்படுத்தப்படும்,'' விருதுநகர் கலெக்டர் பாலாஜி தெரிவித்தார்.

விருதுநகரில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டமான 'சைல்டு லைன்' திட்டத்தை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: குழந்தைகள் பாதுகாப்பு திட்டமானது 24 மணி நேரமும் செயல்படும்.

இத்திட்டம் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிக்கான துறையின் நிதியுடன் மாநில, மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு இல்லாத குழந்தைகளுக்கு பாதுகாப்பும், அரவணைப்பும் வழங்கப்படும். இக்கட்டான சூழ்நிலையில் உள்ள குழந்தைகள் பற்றி, குழந்தைகளோ, பெரியவர்களோ 1098 என்ற இலவச தொலை பேசியில் அழைத்தால் சைல்டு லைன் தேவையான பாதுகாப்புக்கு வழி காட்டும். இந்தியாவில் 25 மாநிலங்களில் 83 நகரங்களில் இந்த அமைப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2015 ம் ஆண்டுக்குள் 596 மாவட்டங்களில் உள்ள நகரங்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது, என்றார்.








      Dinamalar
      Follow us