ADDED : அக் 27, 2025 03:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: பெங்களூரில் இருந்து நாகர்கோவில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலின் (17235) முன்புறம் பொதுப்பெட்டியில் கள்ளிக்குடி, விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது நீல நிற தோள்பட்டை பேக், பச்சை நிற டிராவல் பேக் ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட குட்கா 25 கிலோ கடத்தப்படுவதை கண்டறிந்தனர். விருதுநகர் ரயில்வே போலீசார் கடத்தலில் ஈடுபட்ட கன்னியாகுமரி தோவாளையைச் சேர்ந்த பெரியசாமியை 40, கைது செய்தனர்.

