sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

450 கிலோ ரேஷன் துவரம் பருப்பு கடத்திய 3பேர் கைது

/

450 கிலோ ரேஷன் துவரம் பருப்பு கடத்திய 3பேர் கைது

450 கிலோ ரேஷன் துவரம் பருப்பு கடத்திய 3பேர் கைது

450 கிலோ ரேஷன் துவரம் பருப்பு கடத்திய 3பேர் கைது


ADDED : நவ 19, 2024 04:57 AM

Google News

ADDED : நவ 19, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி: திருச்சுழி அருகே ரேஷன் துவரம் பருப்பு கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

திருச்சுழி அருகே புலிக்குறிச்சி சந்திப்பில் நேற்று முன் தினம் இரவு உணவு கடத்தல் பிரிவு எஸ்.ஐ., அழகுபாண்டி மற்றும் போலீசார் அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர். அதில் 450 கிலோ ரேஷன் துவரம் பருப்பு கடத்தி வந்தது தெரிய வந்தது. காரில் வந்த கடலாடி புனவாசல் பகுதியைச் சேர்ந்த திருமுருகன்,32, திருப்பாண்டி,25, அஜித்குமார், 25, ஆகியோரிடம் விசாரித்ததில், கடலாடி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள துவரம் பருப்பு மூடைகளை கடத்தி விருதுநகர் கொண்டு செல்வது தெரிய வந்தது.

இதையடுத்து, மூவரையும் போலீசார் கைது செய்து ரேஷன் துவரம்பருப்பு மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us