sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பெட்ரோல் குண்டு வீச்சு 3 சிறுவர்கள் கைது

/

பெட்ரோல் குண்டு வீச்சு 3 சிறுவர்கள் கைது

பெட்ரோல் குண்டு வீச்சு 3 சிறுவர்கள் கைது

பெட்ரோல் குண்டு வீச்சு 3 சிறுவர்கள் கைது


ADDED : ஆக 29, 2025 05:35 AM

Google News

ADDED : ஆக 29, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் அண்ணா காலனியைச் சேர்ந்தவர் பால் கண்ணன் 46. இவரது இரு மகன்களான கிருஷ்ணராஜன், கிருஷ்ணபிரபு சிவகாசி காய்கறி மார்க்கெட்டில் கடை நடத்தி வருகின்றனர். ஆடி பதினெட்டு அன்று நடந்த திருவிழாவின் போது திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சேர்ந்த 17 வயதுடைய மூன்று சிறுவர்கள், 15 வயது சிறுவன் ஆகியோர் நடனம் ஆடியதில் தகராறு ஏற்பட்டது. கிருஷ்ணபிரபு அவர்களை கண்டித்தார்.

இந்நிலையில் சிறுவர்கள் நான்கு பேரும் நேற்று முன்தினம் அதிகாலை 2:30 மணியளவில் பால் கண்ணன் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டை வீசினர். இதில் ஜன்னல் தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து சிறுவர்கள் தப்பினர். திருத்தங்கல் போலீசார் மூன்று சிறுவர்களை கைது செய்து,15 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us