/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேசிய திறனாய்வு தேர்வு 304 மாணவர்கள் தேர்ச்சி
/
தேசிய திறனாய்வு தேர்வு 304 மாணவர்கள் தேர்ச்சி
ADDED : ஏப் 17, 2025 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: தமிழக அளவில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வில்விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 304 மாணவர்கள்தேர்வெழுதி தேர்ச்சி பெற்றனர்.
மத்திய அரசால் தேசிய திறனாய்வு தேர்வு 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் வழங்கப்படும்.
இந்தாண்டுக்கான தேர்வில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 6300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 304 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் 8வது இடத்தை பிடித்துள்ளது.