/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
4வது நாள் காத்திருப்பு போராட்டம்
/
4வது நாள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஆக 21, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: பழைய பென்சன் திட்டத்தை அனைவருக்கும் வழங்குதல், உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தின் முன்பு சி.ஐ.டி.யு., போக்குவரத்து ஊழியர் சங்கம், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் 4வது நாளாக காத்திருப்பு போராட்டம் மத்திய சங்க தலைவர் திருப்பதி தலைமையில் நடந்தது.
இதில் மதுரை ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மண்டல பொதுச் செயலாளர் வாசுதேவன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் பாலம்மாள், வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மாரிக்கனி, ஓய்வு பெற்றோர் நலஅமைப்பு நிர்வாகிகள் முனீஸ்வரன், அழகர்சாமி, ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.