sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வங்கி கடன் வழங்கியதில் ரூ.3 லட்சம் மோசடி மேலாளர் உட்பட இருவருக்கு 5 ஆண்டு சிறை

/

வங்கி கடன் வழங்கியதில் ரூ.3 லட்சம் மோசடி மேலாளர் உட்பட இருவருக்கு 5 ஆண்டு சிறை

வங்கி கடன் வழங்கியதில் ரூ.3 லட்சம் மோசடி மேலாளர் உட்பட இருவருக்கு 5 ஆண்டு சிறை

வங்கி கடன் வழங்கியதில் ரூ.3 லட்சம் மோசடி மேலாளர் உட்பட இருவருக்கு 5 ஆண்டு சிறை


ADDED : அக் 11, 2024 03:03 AM

Google News

ADDED : அக் 11, 2024 03:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்துார் தாய்கோ வங்கி கிளைகளில் போலி ஆவணங்கள் தயாரித்து தனி நபர்களுக்கு கடன் வழங்கி அரசு நிதி ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக, ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ராமச்சந்திரன் 75, இருக்கன்குடி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலக உதவியாளர் திருநாவுக்கரசு 76, ஆகியோருக்கு 5 ஆண்டு சிறை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2001--2004ல் சிவகாசி, சாத்துார் தாய்கோ வங்கி கிளைகள் மூலம் வழங்கப்பட்ட தனிநபர் கடன்களில் கிளை மேலாளர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தி வருவதாகவும், அதனை விசாரித்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு சிறு தொழில் அரசு செயலர், மாநில லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு புகார் அளித்திருந்தார்.

அதன்படி விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை நடத்தி, ரூ.3 லட்சம் அரசு நிதி இழப்பீடு செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

இது தொடர்பாக சிவகாசி தாய்கோ வங்கி கிளை மேலாளர் ராமச்சந்திரன், பொதுப்பணித்துறை இருக்கன்குடி நீர்தேக்கத்திட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலக உதவியாளர் ராஜன், ராஜபாளையம் மேல வைப்பார் வடிநிலக்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலக உதவியாளர் திருப்பதி வெங்கடாசலம், விருதுநகர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலக இளநிலை உதவியாளர் திருநாவுக்கரசு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை காலத்தின் போது ராஜன், திருப்பதி வெங்கடாசலம் இறந்துவிட்டனர்.

ராமச்சந்திரன், திருநாவுக்கரசு ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 35 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பிரித்தா தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us