sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அரசு மருத்துவமனைக்கு 50 மர பெஞ்ச் நன்கொடை

/

அரசு மருத்துவமனைக்கு 50 மர பெஞ்ச் நன்கொடை

அரசு மருத்துவமனைக்கு 50 மர பெஞ்ச் நன்கொடை

அரசு மருத்துவமனைக்கு 50 மர பெஞ்ச் நன்கொடை


ADDED : அக் 29, 2025 07:47 AM

Google News

ADDED : அக் 29, 2025 07:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு ஐ.டி.பி.ஐ., வங்கி மூலம் ரூ. 3 லட்சத்தில் 50 மர பெஞ்ச்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் அரசு மருத்துவமனையில் மூன்று பேர்கள் அமரக்கூடிய நாற்காலிகளில் அதிகமான நபர்கள் அமர்வதால் பாரம் தாங்காமல் தொடர்ந்து சேதமாகியது. இவற்றை பழுது நீக்கி, வெல்டிங் வைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் நடக்கிறது.

மேலும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் உள் நோயாளிகளை உடன் இருந்து பார்த்துக்கொள்பவர்கள் பலர் காத்திருப்பு பகுதியில் தரையில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டது.

மருத்துவமனை டீன் ஜெயசிங் நடவடிக்கையால் ஐ.டி.பி.ஐ., வங்கி மூலம் சி.எஸ்.ஆர்., நிதியில் ரூ.3 லட்சத்தில் 50 மர பெஞ்ச்கள் நன்கொடையாக பெறப்பட்டது. இவைகள் உள்நோயாளி பிரிவுகளில் காத்திருப்பு பகுதிகளில் அமைக்கப் படவுள்ளது.






      Dinamalar
      Follow us