/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
7 வயது பேத்தியை சீண்டிய 70 வயது தாத்தா போக்சோவில் கைது
/
7 வயது பேத்தியை சீண்டிய 70 வயது தாத்தா போக்சோவில் கைது
7 வயது பேத்தியை சீண்டிய 70 வயது தாத்தா போக்சோவில் கைது
7 வயது பேத்தியை சீண்டிய 70 வயது தாத்தா போக்சோவில் கைது
ADDED : ஜன 26, 2025 07:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்:  விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது முதியவர். பக்கத்து வீட்டில் அவரது அண்ணன் மகனின் மனைவி 7 வயது மகளுடன் வசித்து வருகிறார்.
இரு நாட்களுக்கு முன்பு 7 வயது சிறுமி வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற முதியவர் சிறுமியிடம் விளையாடுவது போல் நடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
வீட்டிற்கு வந்த தாயிடம் சிறுமி அழுதபடி நடந்ததை கூறினார். சாத்துார் மகளிர் போலீசார் போக்சோவில் முதியவரை கைது செய்தனர்.

