ADDED : ஜன 08, 2025 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: காலிப்பணியிடங்களை நிரப்புவது, நுாறு நாள் திட்டத்திற்கு தனி ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 21 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விருதுநகரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மறியல் நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜகோபாலன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் புகழேந்தி பேசினார். கலெக்டர் அலுவலக வாயிலை மறிக்க முயன்ற 5 பெண்கள் உட்பட 71 பேர் கைது செய்யப்பட்டனர்.