ADDED : பிப் 13, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : திருவனந்தபுரம் அருகே புன்னக்காட்டைச் சேர்ந்தவர் முகேஷ் 33. இவர் அக்னி நித்திரையா என்ற கலைக்குழுவை நடத்தி வருகிறார். இக்குழுவினர் பிப். 11 ல் திருப்பரங்குன்றத்தில் கலை நிகழ்ச்சியை முடித்து காரில் திருவனந்தபுரம் செல்ல விருதுநகர் - சாத்துார் தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். அப்போது டிரைவர் ஆனந்த் 36, துாக்க கலக்கத்தில் நடுவப்பட்டி பஸ்டாப் அருகே பாலத்தில் மோதியதில் கார் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் டிரைவர் ஆனந்த், சுவேதா 27, முகேஷ், ராகுல் 23, ரேஸ்மீ 27, கிறிஸ்டியானா 22, சரத் 24, ரியாஸி 19 காயமடைந்து சாத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.