ADDED : மார் 20, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் ஏ.டி.எம்.,ல் பணம் நிரப்ப வந்த வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.8 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராஜபாளையம் மதுரை ரோட்டில் தேர்தல் பறக்கும் படை குழுவினர்  வாகன சோதனையில் ஈடுபட்டனர். தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.,ல் பணம் நிரப்பும் வாகனத்தை சோதனை செய்ததில் ரூ.8 லட்சம் பணம் இருந்தது.
பணத்திற்கு ஆவணம் முறையாக இல்லை எனக் கூறி வருவாய் துறையினரிடம்  ஒப்படைத்துள்ளனர்.

