/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் மண்டலத்தில் 9 புதிய பஸ்கள்
/
விருதுநகர் மண்டலத்தில் 9 புதிய பஸ்கள்
ADDED : ஆக 27, 2025 12:19 AM
விருதுநகர்; விருதுநகரில் பழைய பஸ் ஸ்டாண்டில் அரசு போக்குவரத்து கழகம், மண்டலத்தில் புதியதாக வாங்கப்பட்ட 9 பஸ்களின் சேவையை கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு துவக்கி வைத்தனர்.
எம்.எல்.ஏ., சீனிவாசன் முன்னிலை வகித்தார். விருதுநகர் மண்டலத்தில் தற்போது 457 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி ராஜபாளையம் - மதுரை - செங்கோட்டை, ராஜபாளையம் - செங்கோட்டை - பழனி, அருப்புக்கோட்டை - பழனி, சிவகாசி - மதுரை - திருச்சி , ராஜபாளையம் - மதுரை - திருச்சி, சிவகாசி - மதுரை - திருச்சி, அருப்புக்கோட்டை -மதுரை -திருச்சி, கோவில்பட்டி - மதுரை - திருச்சி , ராஜபாளையம் - மதுரை - திருச்சி வழித்தடங்களிலும் சேவைகள் நேற்று துவங்கி வைக்கப்பட்டுள்ளன.
மண்டல பொது மேலாளர் கலைவாணன், நகராட்சித் தலைவர் மாதவன் பங்கேற்ற னர்.