sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பயன்பாட்டிற்கு வராமல் சேதமான சுகாதார வளாகம்

/

பயன்பாட்டிற்கு வராமல் சேதமான சுகாதார வளாகம்

பயன்பாட்டிற்கு வராமல் சேதமான சுகாதார வளாகம்

பயன்பாட்டிற்கு வராமல் சேதமான சுகாதார வளாகம்


ADDED : அக் 10, 2025 02:57 AM

Google News

ADDED : அக் 10, 2025 02:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் கட்டி முடித்து பல ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராமலேயே நகராட்சி சுகாதார வளாகம் சேதமடைந்ததால் லட்சக்கணக்கில் செலவிடப்பட்ட நகராட்சி நிதி வீணானது.

அருப்புக்கோட்டை நகராட்சி 25 வது வார்டிற்கு உட்பட்டது தேவா டெக்ஸ் காலனி. இங்கு 5 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு சுகாதார வளாகம் வசதி இல்லாததால் மக்கள் சிரமப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு நகராட்சி மூலம் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 2015 ல், 9.50 நிதியில் சமுதாய கழிப்பிடம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வரவில்லை. பராமரிக்க ஆட்கள் இல்லை என நகராட்சி நிர்வாகம் கூறியது.

பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போதைய சுகாதார வளாகத்தில் மரம் செடி கொடிகள் வளர்ந்து கட்டிடமும் பல பகுதிகளில் விரிசல் கண்டு சேதமடைந்து வருகிறது. லட்சக்கணக்கில் நகராட்சி நிதியை செலவழித்து கட்டப்பட்ட கட்டடம் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்து கிடக்கிறது. சுகாதார வளாகம் இருந்தும் பயன்படுத்த முடியவில்லை என இப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.

நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us