sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரர் கைது

/

உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரர் கைது

உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரர் கைது

உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரர் கைது


ADDED : பிப் 11, 2025 07:45 AM

Google News

ADDED : பிப் 11, 2025 07:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரியும் தனுஷ்கோடி 33, உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.

துாத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர், திருட்டு டூவீலரில் தப்பிச் சென்றதாக விருதுநகர் மாவட்ட போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. விருதுநகர் பட்டம்புதுார் அருகே சந்தேகப்படும்படி சுற்றி திரிந்த அவர்களை ஆர்.ஆர்.நகரில் வச்சக்காரப்பட்டி போலீசார் பிடித்தனர்.

அதில் ஒருவர் மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணிபுரியும் கூமாபட்டியைச் சேர்ந்த தனுஷ்கோடி ஆவார். இவர் உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்ததும், அதில் 5 தோட்டாக்கள் மட்டுமே இருப்பதும், இவர் மீது ஏற்கனவே வத்திராயிருப்பு ஸ்டேஷனில் மணல் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து தனுஷ்கோடியை போலீசார் கைது செய்தனர். மற்றொரு நபரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us