ADDED : ஆக 07, 2025 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : திருத்தங்கல் ஹிந்து நாடார் உறவின்முறைக்கு சொந்தமான காளியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
காலையில் கணபதி ஹோமத்துடன் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. திருவிழாவில் தினமும் இரவு 7:00 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர் களுக்கு காட்சியளிப்பார்.
3ம் நாள் விழாவில் 501 திருவிளக்கு பூஜை, பால்குட ஊர்வலம், 8ம் நாள் விழாவில் பொங்கல் வைத்து வழிபட்டு முளைப்பாரி ஊர் வலம் நடக்கும்.
அன்று மயிலாட்டம், மாடாட்டம் பொய்க்கால் குதிரை, சாட்டை குச்சி ஆட்டம், கோலாட்டம், ஐந்து வகை கரக ஆட்டம் பறை வாத்தியங்களுடன் நடைபெறும்.