ADDED : மார் 09, 2024 08:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நடந்த பிளஸ் டூ கணினி அறிவியல், உயிர் வேதியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் உள்ளிட்ட 11 தேர்வுகளில் 149 பேர் வரை ஆப்சென்ட் ஆகினர்.
மாவட்டத்தில் நேற்று 98 மையங்களில் கணினி அறிவியல், உயிர் வேதியியல், அரசியல் அறிவியல், வீட்டு அறிவியல், நர்சிங், புள்ளியியல் உள்ளிட்ட 11 தேர்வுகள் நடந்தன.
இதில் சிவகாசி கல்வி மாவட்டத்தில் 2716 மாணவர்கள், 2272 மாணவிகள் என 4988 பேரில் 4926 பேர் தேர்வெழுதினர்.
அதே போல் விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 2052 மாணவர்கள், 1637 மாணவிகள் என 3689 பேரில் 3602 பேர் தேர்வெழுதினர். இரு கல்வி மாவட்டத்திலும் சேர்த்து 149 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

