/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி வேலாயுத ரஸ்தா ரோட்டில் மாடுகளால் விபத்துக்கள்
/
சிவகாசி வேலாயுத ரஸ்தா ரோட்டில் மாடுகளால் விபத்துக்கள்
சிவகாசி வேலாயுத ரஸ்தா ரோட்டில் மாடுகளால் விபத்துக்கள்
சிவகாசி வேலாயுத ரஸ்தா ரோட்டில் மாடுகளால் விபத்துக்கள்
ADDED : நவ 07, 2024 01:05 AM

சிவகாசி: சிவகாசி வேலாயுத ரஸ்தா ரோட்டில் நடமாடும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
சிவகாசி சாட்சியாபுரம் மேம்பாலம் பணிகள் நடந்து வருவதை ஒட்டி வேலாயுத ரஸ்தா ரோடு முக்கிய மாற்றுப் பாதையாக உள்ளது.
நகர் பஸ்கள், பள்ளி கல்லுாரி வாகனங்கள், கனரக வாகனங்கள், கார்கள், டூவீலர்கள் என அனைத்து வாகனங்களும் இந்த ரோட்டில் தான் சென்று வருகின்றன. மேலும் இந்த ரோட்டை கடந்து தான் ரயில்வே ஸ்டேஷன், அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
இந்நிலையில் வேலாயுத ரஸ்தா ரோட்டில் எந்நேரமும் மாடுகள் நடமாடுகின்றது. இதனால் எந்த வாகனமும் எளிதில் சென்று வர முடியவில்லை.
போக்குவரத்து நிறைந்த ரோட்டில் மாடுகள் நடமாடுவதால் அனைத்து வாகன ஓட்டிகளும் சிரமப்படுவதோடு விபத்திலும் சிக்குகின்றனர். மாடுகள் விலகிச் செல்வதற்காக ஹாரன் அடித்தாலும் இவைகள் கொஞ்சம் கூட நகர்வதில்லை.
ஒரு சில மாடுகள் பயந்து ஓடி வாகன ஓட்டிகளை விபத்திற்கு உள்ளாக்குகிறது. அவசரத்திற்கு வருகின்ற ஆம்புலன்ஸ் வாகனத்திற்கும் இதே நிலைதான் ஏற்படுகின்றது.
எனவே இப்பகுதியில் நடமாடுகின்ற மாடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.