sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குறுகிய ஆபத்தான நரிக்குடி-வீரசோழன் ரோடு விபத்தை தவிர்க்க நடவடிக்கை அவசியம்

/

குறுகிய ஆபத்தான நரிக்குடி-வீரசோழன் ரோடு விபத்தை தவிர்க்க நடவடிக்கை அவசியம்

குறுகிய ஆபத்தான நரிக்குடி-வீரசோழன் ரோடு விபத்தை தவிர்க்க நடவடிக்கை அவசியம்

குறுகிய ஆபத்தான நரிக்குடி-வீரசோழன் ரோடு விபத்தை தவிர்க்க நடவடிக்கை அவசியம்


ADDED : ஆக 07, 2025 11:13 PM

Google News

ADDED : ஆக 07, 2025 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி: நரிக்குடி ஒட்டங்குளம் வழியாக வீரசோழன் செல்லும் ரோடு கொண்டை ஊசி வளைவு, குறுகலாக, ஆபத்தாக உள்ளதால், நேராக ரோடு அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

நரிக்குடி பகுதியில் கிராமங்களுக்கு முன் வண்டி பாதையாக இருந்ததை தற்போது ரோடாக மாற்றினர். அதிக வளைவு நெளிவுகளுடன் ரோடு உள்ளது. சில கிராமங்களுக்கு அதிக கொண்டை ஊசி வளைவுகளுடன் கண்மாய் கரையில் ரோடு உள்ளது.

நரிக்குடியில் இருந்து ஒட்டங்குளம் வழியாக வீரசோழன் 10 கி.மீ. அதே ஊருக்கு மானாமதுரை சாலை வழியாக சென்றால் 16 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டும்.

அபிராமம், கமுதி உள்ளிட்ட ஊர்கள் செல்ல பக்கம் என்பதால் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

10 கி.மீ., தூரத்தில் 20க்கு மேற்பட்ட இடங்களில் கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ரோடு குறுகலாக உள்ளது.

இரு வாகனங்கள் விலகுவதில் சிரமம் ஏற்படுகிறது.

இரவு நேரங்களில் அதி வேகமாக வரும் டூவீலர் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் வளைவில் திருப்ப முடியாமல் விபத்தில் சிக்குகின்றனர். அப்பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. கனரக வாகனங்கள் சென்று வருவதில் கடும் சிரமம் ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு கொண்டை ஊசி வளைவை நேராக நிமிர்த்தி ரோடு அமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us