/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் புரோக்கர்கள் மூலம் கூடுதல் பணம் வசூல்
/
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் புரோக்கர்கள் மூலம் கூடுதல் பணம் வசூல்
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் புரோக்கர்கள் மூலம் கூடுதல் பணம் வசூல்
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் புரோக்கர்கள் மூலம் கூடுதல் பணம் வசூல்
ADDED : பிப் 16, 2024 04:36 AM
மாவட்டத்தில் விருதுநகர், ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த அலுவலகங்கள் மூலம் புதிய வாகனம் பதிவு செய்தல், ஒட்டுநர் உரிமம், உரிமையாளர் பெயர் மாற்றம், தரச்சான்று உள்பட வாகனங்கள் தொடர்பான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
இங்கு டூவீலருக்கு எல்.எல்.ஆர்.,ரூ. 230, உரிமத்திற்கு ரூ. 800 என அரசு நிர்ணயித்துள்ளது. இந்த அலுவலகங்களுக்கு வெளியே இருக்கும் புரோக்கர்கள் மூலம் சென்றால் மட்டுமே பணிகள் நடக்கிறது. இவர்கள் மூலம் செல்லும் போது எல்.எல்.ஆர்., உரிமம், புரோக்கர் கமிஷன் என மொத்தம் ரூ. 2500 வரை வசூலிக்கின்றனர்.
முந்தைய நாள் விண்ணப்பித்தால் தான் மறுநாள் உடனடியாக பணிகளை மேற்கொள்ள முடியும் என கூறி புரோக்கர்களே தனியாக ஆபீஸ் வைத்து விண்ணப்பங்களை தயார் செய்து செயல்படுகின்றனர்.
இவர்களே பணத்தையும் ஆன்லைனில் செலுத்தி விட்டு, அவர்களிடம் மொத்தமாக பணத்தை பெறுகின்றனர். இதே நடைமுறையை தான் கார், வேன், லாரி உரிமம் பெறுபவர்களிடமும் பின்பற்றுகின்றனர். அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் பணத்தை புரோக்கர்கள் வசூலித்து வருகின்றனர்.
இது தவிர வாகன ஒட்டுநர் உரிமம் குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்க தவிறினால் அந்த குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஏற்ப ஆன்லைனில் அபராதத்தொகை செலுத்தி புதுப்பித்து கொள்ள முடியும். ஆனால் வட்டார போக்குவரத்து அலுவலங்களில் நேரில் சென்று கேட்பவர்களிடம் நோட்ஷீட் ' முறையில் ஆவணங்களை தயார் செய்து ஒப்புதல் அளிக்கின்றனர்.
ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தால் வட்டார போக்குவரத்து அலுவலர் மட்டுமே ஒப்பதல் அளித்தால் போதுமானது. இந்த 'நோட்ஷீட் 'முறையில் அனைத்து அலுவலர்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதையே தொடர்ந்து பின்பற்றி அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதல் பணத்தை விண்ணப்பதார்களிடம் இருந்து பெறுகின்றனர்.
இந்த பணிக்காகவே வெளிநபர்களை புரோக்கர்களாக செயல்பட்டு வசூல் செய்து வருகின்றனர். மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் மக்களுக்கு கிடைக்கூடிய பணிகள் எளிமையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரத்யேக திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.
ஆனால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் புரோக்கர்கள் மூலம் கூடுதல் பணம் வசூல் செய்வது யாரும் தடுக்க முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள புரோக்கர்களை வெளியேற்றி அரசு நிர்ணயித்த தொகையை விண்ணப்பத்தாரர்களிடம் ஆன்லைன் முறையில் மட்டுமே பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.