நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தலைமையில் மழைசேதம் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்ததோடு பயிர் சேதம் குறித்து விவசாயிகள் அளித்த மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக சாத்துார் நகராட்சியில் துாய்மை பணிக்காக ரூ 22 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ள பேட்டரி வாகனங்களை அமைச்சர் துவக்கி வைத்தார்.