sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

திருச்சுழியில் விற்பனைக்கு தயாராகும் ஆந்திரா சம்பா மிளகாய் வத்தல்

/

திருச்சுழியில் விற்பனைக்கு தயாராகும் ஆந்திரா சம்பா மிளகாய் வத்தல்

திருச்சுழியில் விற்பனைக்கு தயாராகும் ஆந்திரா சம்பா மிளகாய் வத்தல்

திருச்சுழியில் விற்பனைக்கு தயாராகும் ஆந்திரா சம்பா மிளகாய் வத்தல்


ADDED : மார் 05, 2024 06:04 AM

Google News

ADDED : மார் 05, 2024 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி : திருச்சுழி பகுதிகளில் ஆந்திரா சம்பா மிளகாய் அறுவடை செய்து வெயிலில் காய வைக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளது.

திருச்சுழி, தம்பநாயக்கன்பட்டி,மீனாட்சிபுரம், வேப்பனசேரி, ஆலடிப்பட்டி உட்பட பகுதிகளில் மிளகாய் விவசாயத்திற்கு பெயர் போனது. இந்தப் பகுதியில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப ஆந்திரா சம்பா மிளகாய் பயிரிடுகின்றனர். 500 ஏக்கருக்கு மேல் மிளகாய் பயிரிடப்படுகிறது.

மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சூரங்குடி உட்பட, பல ஊர்களில் இருந்து வியாபாரிகள் மொத்தமாக இங்கு வந்து மிளகாய் கொள்முதல் செய்வர். நல்ல காரமும், சிவப்பு நிறத்தில் இருப்பதால் இந்த பகுதி களில் விளையும் மிளகாய்க்கு கடும் கிராக்கி உள்ளது.

இது குறித்து இந்த பகுதி விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விளைச்சல் குறைவு. சில மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையில் மிளகாய் பயிர்கள் சேதம் அடைந்து விட்டன.

மீதமுள்ள மிளகாய் பயிர்களை காப்பாற்றி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். 100 கிலோவிற்கு 18 முதல் 19 ஆயிரம் வரை விலை போகிறது. நீர்நிலைகளை பராமரித்தால் விளைச்சல் இன்னும் நன்றாக இருக்கும். என்றனர்.






      Dinamalar
      Follow us