/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அங்கன்வாடி ஊழியர்கள் விருதுநகரில் ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஊழியர்கள் விருதுநகரில் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 05, 2025 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்குவது, பணிக்கொடை ரூ.10 லட்சம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பவுன் தாய் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் துர்கா, மாநில குழு விமலா ராணி, மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் தேவா பேசினார்.

