sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் எப்போது எதிர்பார்ப்பில் விண்ணப்பதாரர்கள்

/

கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் எப்போது எதிர்பார்ப்பில் விண்ணப்பதாரர்கள்

கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் எப்போது எதிர்பார்ப்பில் விண்ணப்பதாரர்கள்

கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் எப்போது எதிர்பார்ப்பில் விண்ணப்பதாரர்கள்


ADDED : மே 15, 2025 03:00 AM

Google News

ADDED : மே 15, 2025 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்:தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ள நிலையில், பிரசித்தி பெற்ற கோயில்களில் மட்டும் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான கோயில்களில் விண்ணப்பம் பெறப்பட்டும் இதுவரை அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை.

தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரம் கோயில்கள், திருமடங்கள், திருமடங்களுடன் இணையாத கோயில்கள், அறக்கட்டளைகள், சமணத் திருக்கோயில்கள் என 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் செயல்பட்டு வருகிறது.

இவற்றில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், மதுரை மீனாட்சி அம்மன், திருச்செந்தூர் முருகன், பழனி முருகன் போன்ற பிரசித்தி பெற்ற கோயில்களில் மட்டுமே கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும், தற்போதைய தி.மு.க. ஆட்சியிலும் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

நீதிமன்ற உத்தரவின் படி அனைத்து கோயில்களிலும் அறங்காவலர்கள் நியமனம் செய்ய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வாங்கப்பட்டது. அதிகபட்சம் 500 கோயில்களுக்குள் மட்டுமே அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை.

தி.மு.க. ஆட்சி ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், தங்களுக்கு அறங்காவலர் பதவி கிடைக்குமா என கட்சியினர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.






      Dinamalar
      Follow us