/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தபால் ஓட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
/
தபால் ஓட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 21, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தேர்தலுக்கு சட்டசபை தொகுதி வாரியாக அத்தியாவசியப் பணிகளின் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அஞ்சல் ஓட்டுப்பதிவிற்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக விண்ணப்பிப்பவர் விருதுநகர் லோக்சபா தொகுதி அடங்கிய சட்டசபை பகுதிகளில் வாக்காளராக இருக்க வேண்டும்.
ஏப். 19ல் விண்ணப்பதாரர் அலுவலகப் பணியில் ஈடுபடுவார், அதனால் ஓட்டுச்சாவடியில் ஓட்டுபதிவு செய்ய முடியாது என்பதற்கு துறையின் பொறுப்பு அலுவலரிடம் படிவம் 12 டி பாகம் 2 ல் சான்றிதழ் பெற்று மார்ச் 25 க்குள் விருதுநகர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் ஜெயசீலனுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

