ADDED : பிப் 17, 2025 05:28 AM
அ நிறம் | அளவு
விருதுநகர் : விருதுநகர் ஸ்ரீ வித்யா கல்வியியல் கல்லுாரியில் நடந்த தீந் தமிழ் கலைவிழாவை கல்விக் குழுமங்களின் தலைவர் திருவேங்கடராமானுஜதாஸ் துவக்கி வைத்தார்.
கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். ஸ்ரீவித்யா கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதில் மாவட்டத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியம் உள்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. போட்டியில் வே.வ.வன்னிய பெருமாள் பெண்கள் கல்லுாரி மாணவர்கள் முதலிடம், எஸ்.ஆர்.என்.எம்., கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்கள் இரண்டாமிடம் வென்றனர்.
