/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருமண மண்டப உரிமையாளர் மீது தாக்குதல்
/
திருமண மண்டப உரிமையாளர் மீது தாக்குதல்
ADDED : பிப் 21, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: தாலுகா அலுவலகம் பின்புறத்தைச் சேர்ந்தவர் பகவத்சிங் 53. இவர் அருப்புக்கோட்டை ரோட்டில் சந்திர போஸ் என்ற திருமண மண்டபத்தை நடத்துகிறார்.
இவரின் மகன் படிப்பிற்காக ஜெயபிரகாஷ் என்பவரிடமிருந்து கடன் வாங்கியிருந்தார். வாங்கிய கடனிற்கும் மேல் பணத்தை செலுத்த கட்டாயப்படுத்தி பிப். 15 இரவு 10:30 மணிக்கு விருதுநகர் கே.வி.எஸ்., பள்ளி அருகே டூவீலரில் சென்ற போது ஜெயபிரகாஷ், ஆறுமுகம் தாக்கியதில் பகவத் சிங் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

