ADDED : அக் 01, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழ் இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் 255வது எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் பென்னிங்டன் நூலகத்தில் நடந்தது.
தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். சங்கீத வித்துவான் மோகன், நூலகர் கந்தசாமி இறைபாடல்கள் பாடினர். எழுத்தாளர் பெரியசாமியின் படைப்புகளை விமர்சித்து பேராசிரியர் சிவனேசன், புலவர் சிவனணைந்தபெருமாள், எழுத்தாளர்கள் சோமசுந்தரம், எத்திராஜ், ரமேஷ், தமிழ் துறை பேராசிரியர் தமிழ்மாறன் பேசினர். எழுத்தாளர் பெரியசாமி ஏற்புரையாற்றினர். துணை செயலாளர் அடைக்கலம் நன்றி கூறினார்.

