ADDED : பிப் 26, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்துாரில் கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது.
தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். கவிஞர் ருத்ராவின் அரிதாரம் கவிதை தொகுப்பு புத்தகம் குறித்து புலவர் சிவனனைந்த பெருமாள், பேராசிரியர் சிவனேசன் விமர்சனம் செய்தனர்.
புலவர் சிவனனைந்த பெருமாள் எழுதிய புதிய உதயம் கவிதை தொகுப்பு புத்தகத்தை உலகநாதன் வெளியிட, ஸ்ரீ ரெங்கராஜா பெற்றுக் கொண்டார். எழுத்தாளர்கள் சிவக்குமார் வாழ்த்திப் பேசினார். எழுத்தாளர்கள் கந்தசாமி, மோகன், பொன்னூராஜன், சோமசுந்தரம், துள்ளுக்குட்டி பங்கேற்றனர்.

