sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

காற்று வீசும்போது தென்னை மரம் ஏறுவதை தவிர்க்கவும்: துணை இயக்குனர் அறிவுரை

/

காற்று வீசும்போது தென்னை மரம் ஏறுவதை தவிர்க்கவும்: துணை இயக்குனர் அறிவுரை

காற்று வீசும்போது தென்னை மரம் ஏறுவதை தவிர்க்கவும்: துணை இயக்குனர் அறிவுரை

காற்று வீசும்போது தென்னை மரம் ஏறுவதை தவிர்க்கவும்: துணை இயக்குனர் அறிவுரை


ADDED : அக் 31, 2025 01:44 AM

Google News

ADDED : அக் 31, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் அதிக காற்று வீசும் நேரத்தில் தென்னை மரம் ஏறுவதை தவிர்க்க வேண்டும், என தோட்டக்கலை துணை இயக்குனர் சுபாவாசுகி கூறினார்.

அவரது செய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவமழை அக். 2ம் பாதியில் துவங்கி, டிச. வரை நீடிக்கும். கனமழை, புயல் ஆகியவற்றால் தென்னை மரங்களில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள விவசாயிகள் முன்னெச்சரிக்கை மேலாண்மை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதிவேக புயல் எச்சரிக்கை காலங்களில் புயலுக்கு முன் தேங்காய் இளநீரை அறுவடை செய்ய வேண்டும்.

மரத்தின் அடிப்பகுதியை சுற்றி மண் அணைத்தல் மூலம் வேர்ப்பகுதியை பாதுகாக்கலாம். ஆழமாக உழவு செய்வதால் வேர்கள் பாதித்து வேர் அழுகல் நோய் பாதிப்பு ஏற்படும். தண்டுப் பகுதியில் அதிக ஈரப்பதம் காரணமாக பூஞ்சை, பாசி வளர்வதை தடுக்க சுண்ணாம்பு அடித்தல் வேண்டும்.

அதிக காற்று வீசும் நேரத்தில் மரம் ஏறுவதை தவிர்க்க வேண்டும். தற்காலிகமாக நீர், ரசாயன உரமிடுவதை தவிர்த்து இயற்கை உரங்களை இடலாம். ஈரப்பதத்தில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், என்றார்.






      Dinamalar
      Follow us