நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் சுண்ணாம்பு கார தெருவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் மார்க்சிஸ்ட் நகர செயலாளர் முருகன் தலைமையில் நடந்தது.
இதில் வெற்றி பெற்ற 42 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் முத்துமணி, நகராட்சி கவுன்சிலர் ஜெயக்குமார், மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளர் காளிதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.