ADDED : அக் 12, 2025 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார், :சாத்துார் தீயணைப்புத்துறை சார்பில் வாங்க கற்றுக் கொள்வோம் என்ற தலைப்பில் மக்களுக்கு தீ விபத்து ஏற்படும் காரணங்கள் குறித்தும் அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் குறித்தும் சிறப்பு முகாம் நடந்தது.
நிலைய அலுவலர் ராமராஜ் தலைமை வகித்தார்.தீயணைப்பு வீரர்கள் விபத்து ஏற்படும்போது தப்பிக்கும் முறை குறித்தும் தீயை அணைக்கும் முறை குறித்தும் தீயணைப்பு கருவிகள் குறித்தும் விளக்கினர். நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ,மக்கள் முகாமில் கலந்து கொண்டனர்.