ADDED : அக் 21, 2024 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு மக்கள், பணியாளர்கள், மாணவர்களிடம் டீன் ஜெயசிங், மருத்துவமனை கண்காணிப்பாளர் லதா ஆகியோர் எடுத்துக்கூறி ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.
இதில் உதவி மருத்துவமனை கண்காணிப்பாளர் அன்புவேல், உதவி நிலைய மருத்துவர் முகமது சுல்தான் இப்ராஹிம், செவிலியர் கண்காணிப்பாளர் முருகபழனி உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பொது அறுவை சிகிச்சை துறை மருத்துவர்கள் கோகுல்நாத்பிரேம்சந், மலர்வண்ணன், ராணி, சங்கர் ஆகியோர் செய்தனர்.

