ADDED : நவ 15, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் நலன், சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளுக்கான நடை என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழித்தல், கல்வியின் அவசியம், குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள், திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., ரவிக்குமார், பயிற்சி கலெக்டர் ஹிமான்சு மங்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி பங்கேற்றனர்.