ADDED : மார் 21, 2024 01:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு சிவகாசியில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
முதல் தலைமுறை வாக்காளர்கள், மாநகராட்சி வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஊர்வலம் காமராஜர் சிலையில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பஸ் ஸ்டாண்டில் முடிவடைந்தது.
கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி விஸ்வநாதன் ஆர்.டி.ஓ., , தாசில்தார் வடிவேல், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

