ADDED : டிச 19, 2025 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி சாத்துார் அரசு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மதுரை பஸ் ஸ்டாப்பில் துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று தாசில்தார் அலுவலகத்தில் முடிந்தது.
முன்னதாக ஆர்.டி.ஓ.கனகராஜ் ஊர்வலத்தை கொடி அசைத்து துவக்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியர் மகேந்திரன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.ஊர்வலத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

