ADDED : ஜன 12, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டாரப் போக்குவரத்து துறை, போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர்ஜெயச்சந்திரன், ராஜபாளையம் நகர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சீமான் பங்கேற்று பேசினர்.
இதில் ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் அணிவதன் அவசியம், விபத்திற்கு மனித தவறுகள் எவ்வாறு முக்கிய காரணம் என மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
மாணவர்கள் ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

