UPDATED : செப் 07, 2026 09:58 PM
ADDED : செப் 07, 2026 09:53 PM
காரியாபட்டி:மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு துறை, மல்லாங்கிணர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காரியாபட்டி நியூ லைப் இன்ஸ்டியூட் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் இணைந்து எய்ட்ஸ் பால்வினை நோய்கள், ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
ஹெல்த் சயின்ஸ் முதலாம் ஆண்டு மாணவிகள் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தாலுகா அலுவலகம் துவங்கி முக்கு ரோடு வழியாக பஸ் ஸ்டாண்ட் வரை.சென்றது. டாக்டர் மருதராஜா, மாவட்ட கண்காணிப்பாளர் அய்யனார், சுரபி அறக்கட்டளை நிறுவனர் விக்டர், இயற்கை விவசாயி ராமச்சந்திரன், மனித உரிமை கழகம் மாவட்ட செயலாளர் பிரின்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஹெல்த் சயின்ஸ் முதல்வர் மகேஸ்வரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை நிறுவனர் முனீஸ்வரன் செய்தார். 30 க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
