ADDED : செப் 27, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியின் உள்ளக புகார் குழுவின் சார்பில் இணைய வழி குற்றங்களும் விழிப்புணர்வும் என்ற தலைப்பில் கருத்தரங்க நடந்தது.
முதல்வர் உமாராணி தலைமை வகித்தார். பேராசிரியை ஹேமலதா, உதவி பேராசிரியை ஜெயந்தி முன்னிலை வகித்தனர். மாணவி புவனா வரவேற்றார். விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் எஸ்.ஐ., ஜெயபிரகாஷ் இணைய வழியில் நடைபெறும் பல்வேறு பாலியல் குற்றங்கள் பற்றியும் சமூக ஊடக தொடர்பை பாதுகாப்பான முறையில் கையாளுவதற்கான வழிமுறைகளையும் பற்றி விளக்கினார்.
முதல் நிலை காவலர் முனியாண்டி சைபர் கிரைம் அவசர உதவி எண் 1930 குறித்தும் பண மோசடி குற்றங்கள் பற்றியும் விளக்கினார். மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. மாணவி திலகவதி நன்றி கூறினார்.

